Wednesday 28 December 2011

OUT COME OF BI-MONTHLY MEETING WITH THE PMG , CCR ON 28.12.2011

28.12.2011 அன்று நடந்த PMG CCR  உடனான இரு மாதங்களுக்கு ஒரு முறையான  பேட்டி சுமுகமாக நடைபெற்றது.  இதன் முடிவாக

1. OUTSOURCING  அளிப்பது குறித்து ஏற்கனவே இலாக்கா முடிவு எதிராக
    இருப்பதாக கூறினாலும் , நாம் வைத்த  வாதங்களைக் கொண்டு , 
   அந்தந்த    கோட்ட அதிகாரிகளுக்கு  சுற்றறிக்கை அனுப்புவதாகவும்
    அவர்கள் மண்டல  அலுவலகத்திற்கு அளிக்கக் கூடிய கோரிக்கை
    அடிப்படையில்  உத்திரவு வழங்கப்படும் என்றும் பதில் அளிக்கப்பட்டது.
    கோட்டச் செயலர்கள் உடன்  கோட்ட நிர்வாகத்தை அணுகுமாறு
    வேண்டுகிறோம்.   PMG  இன் கடித  நகல் பெற்று அனைத்து கோட்ட/
    கிளைச் செயலர்களுக்கும் அனுப்பப் படும்.    

2 . இது போலவே  புள்ளி விபர கணக்கில் வராத வணிகப் பணிகளுக்கு 
     அதற்காக இலாக்காவுக்கு அளிக்கக் கூடிய கமிசன்  தொகையில் , அதில் 
     பணி புரியும் ஊழியருக்கு 25%  INCENTIVE  ஆக வழங்கிட அனைத்து
     கோட்ட அதிகாரிகளுக்கும்  உத்திரவு அளிக்கப் படும் என்றும் பதில்
     பெற்றுள்ளோம் . கோட்டச்  செயலர்கள் உடன் கோட்ட நிர்வாகத்தை
     அணுகுமாறு வேண்டுகிறோம்.  PMG இன் கடித நகல் பெற்று அனைத்து
      கோட்ட/கிளைச்  செயலர்களுக்கும் அனுப்பப் படும்.

3 . VELLORE FORT  அஞ்சலக  பட்டுவாடா பகுதி  VELLORE H.O. உடன் 
     இணைக்கப் பட்டதை  மறு பரிசீலனை செய்வதாக PMG அவர்கள் 
     உறுதி அளித்தார்கள் .  ஜனவரி  முதல் வாரத்தில்  நேரிடையாக
     தானே  வேலூர் சென்று  ஊழியர் குறை கேட்டு பிரச்சினையை
     தீர்ப்பதாகவும்  உறுதி அளித்தார்கள்.

மேலும்

1 .  சென்னை வட கோட்டத்தின் ,  கோட்ட அலுவலக கட்டிடத்தின்
      பிரச்சினை குறித்து   கடிதம் அளித்து அவரிடம்  பேசினோம்.  நிச்சயம்
      இந்தப்  பிரச்சினை அவசர அடிப்படையில்  தீர்க்கப் படும் என்று
      உறுதி அளித்தார்கள் . இது குறித்து  உடன் நடவடிக்கை எடுத்திட
       FILE  NOTE  உம் அவரால் அங்கேயே அளிக்கப்பட்டது .

2 .  அரக்கோணம்  கோட்ட அலுவலகம்  ராணிப் பேட்டை தலைமை
      அஞ்சலகத்திற்கு  மாற்றப்படுவதாக எடுத்த  முடிவு கை விடப்படும்
      என்று   PMG  அவர்கள் உறுதி அளித்தார்கள்.  மாற்றுக் கட்டிடம்
      பார்த்து அளித்திட  ஊழியர் சங்கங்களின்  ஒத்துழைப்பும் அளிக்கப்
      படும் என்று  அவருக்கு  உறுதி அளிக்கப்பட்டது.

நாம் எடுத்து சென்ற பிரச்சினைகளில்,  நாம் வைத்த வாதங்களின் 
அடிப்படையில் ,   ஊழியர்  பிரச்சினைகளில்  சாதகமான முடிவுகளை
எடுத்த PMG CCR   அவர்களுக்கு  நமது  நன்றி !

தோழமையுடன்

J.R.,  மாநிலச் செயலர். 
 
Thanks
NFPE GPO

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.